கொல்கத்தா, மார்ச் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில செய லாளராக முகமது சலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மேற்குவங்க மாநில 26வது மாநாடு கடந்த மூன்று நாட் களாக கொல்கத்தாவில் நடை பெற்றது. மாநாட்டின் நிறைவில் 80 பேர் கொண்ட புதிய மாநி லக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநி லக்குழுவின் புதிய செயலாளராக முகமது சலீம் தேர்வு செய்யப் பட்டார். முகமது சலீம் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பின ராக பொறுப்பு வகித்து வருகிறார். மேற்குவங்கத்தில் கட்சியின் துடிப்புமிக்க மாணவர் தலைவராக தனது பொது வாழ்க்கையை துவக் கிய முகமது சலீம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றி வங்கத்திலும் நாடு முழுவதிலும் இளைஞர்களுக்கான பெரும் எழுச்சிமிக்க போராட்டங் களுக்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் மேற்குவங்கத்திலிருந்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல் பட்டு, உழைப்பாளி மக்கள் நலன் காக்க கர்ஜனை செய்தவர். வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக வலதுசாரி, வலது தீவிர வாத மற்றும் இடது அதிதீவிர சக்தி களால் கொடிய தாக்குதல்கள் ஏவப்பட்ட சமீப காலக்கட்டத்தில், கட்சியின் உறுதி குலையாமல், கட்சி ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் உணர்வுகளை பாதுகாப்பதிலும் வலுப்படுத்துவதி லும் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்ட தலைவர் முகமது சலீம். அவர் உள்பட கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மத்தியக்குழு தனது புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்கியுள்ளது.