tamilnadu

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்தாள் தேர்ச்சி கட்டாயம்

சென்னை, டிச.4-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசுத்துறைகளில் உள்ள பணி யிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறு வனங்களில் உள்ள பணியிடங்களுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாய மாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறி விப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இந்த நட வடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்மொழியை அறியாதவர்கள் தமிழக அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமான ஒன் றாகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தெரியாத வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்படும் விதிமுறை கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு மாநிலத்தின் மொழி தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் பணி யாற்றுவது கடினமான ஒன்றாகும். மேலும் இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் நிலையும் நடைமுறையில் இருந்து வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளி லும் தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றி ருந்தால் மட்டுமே அவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புகளை பெற முடியும் என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

பொருத்தமானது 

தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண் தேர்ச்சி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு தமிழ் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர  போட்டித் தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய் யப்பட மாட்டாது என்று அறிவித்திருப்பதும் பொருத்தமானதே. இதன்மூலம், தமிழக அரசுப்பணி மற்றும் மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர் களின் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள் ளது. மேலும் அண்டை மாநிலத்தவர்கள் மற்றும் நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்து வரும் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இந்த அரசாணையின் மூலம் தமிழ் கட்டாயம் படித்து தேர்வு பெறுவதின் மூலம் அரசுப் பணியில் அமர்த்தப்படும் நிலை உருவாக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் பணி யிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களின் பணியிடங்கள் ஆகியவற்றிலும் தமிழக இளைஞர்களை முன்னுரிமை அடிப் படையில் பணியமர்த்துவதற்கான நடவ டிக்கைகளையும் மேற்கொள்ள ஒன்றிய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;