tamilnadu

img

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன.10-  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலை யான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர் பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில், ஜனவரி 10 வரை பல்வேறு கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு  செய்து அரசாணைகள் வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக் கும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் மட்டு மல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி யினை நிலையான வழிகாட்டு நெறி முறைகளுடன், தற்போது கொரோ னா தொற்று காரணமாக, 2022 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை கீழ்க்கண்ட நிபந்த னைகளுடன் நடத்த அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பின்பற்றப் பட வேண்டிய நிலையான வழி காட்டு நெறிமுறைகள்:

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர் களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக் குள் கொரோனா தொற்று  இல்லை (RT-PCR Test) என் பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

  •     காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாள ருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடை யாள அட்டை இல்லாத நபர் களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
  •     காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமை யாளர் மற்றும் உடன்வரும் உதவி யாளர் ஆகியோரும் பதிவு செய் தல் வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப் பட வேண்டும்.
  •     ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடு பிடி வீரர்கள் 300 நபர் களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  •     எருது விடும் நிகழ்ச்சியில் 150  வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  •     ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடை பெறும் தேதியிலிருந்து 3 நாட் கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக் க்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளா கத்திற்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள்.
  •     ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர் களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற் கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  •     தமிழ்நாடு அரசினால் வெளி யிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனு மதிக்கப்பட்ட இருக்கை எண்ணி க்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனு மதிக்கப்படுவார்கள். பார்வை யாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட தற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத் திருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
  •     ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற் பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகிய வற்றை வைத்திருக்கவேண்டும்.
  •     அனைத்துத் துறை அலுவலர் களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்களும், பார்வையாளர் களும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களும் அரசினால் அறி வுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  •     வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக் கட்டு நிகழ்வுகளை தொலைக் காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.
  • ·    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள், 2017. அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக் கட்டு நடத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஆகிய வற்றுடன் அரசினால் விதிக்கப் படும் கொரோனா தடுப்பு கட்டுப் பாடுகள் அனைத்தும் பின்பற்றப் பட வேண்டும். இவ்வாறு அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.