tamilnadu

அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று

கோவை,டிச.16- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (57). இவரது நேர்முக உதவியாளர் செல்லமுத்து (50). இவர் அமைச்சருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்லமுத்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட் டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோ தனை மேற்கொண்டதில் தொற்று உறுதி யானது. இதனையடுத்து, அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் கொரோனா பரிசோ தனை மேற்கொண்டதில் தொற்று உறுதி யானதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சரின் பிற உதவி யாளர்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த வர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப்  பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக, அமைச்சர் அலுவலகத்தினர் தெரிவித்தனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.