மதுரை, ஜூன் 15- முறைசாரா தொழிலாளர் களுக்கு அரசு அறிவித்த கொரோனா உதவித் தொகையை வழங்க வேண்டும். நிவாரண நிதி பத்தாயி ரம் வழங்கவேண்டுமென்ற பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை புறநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய அலுவலகத் தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.மணி கிருஷ்ணன். வி.பிச்சைராஜன், எம்.அறிவு, சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், ஜி. கௌரி, பொன்.கிருஷ்ணன். எஸ்.எம்.பாண்டி, எம்.சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.