சென்னை,மே 13- வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களை “கழிசடைகள்” என்று இழி வாக பேசியுள்ள ‘துக்ளக்’ குரு மூர்த்தியின் கழிசடையான கூற்றை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சருக்கு அவர் அனுப்பி யுள்ள கடிதம் வருமாறு: “துக்ளக்” விழாவில் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னி லையில் பேசிய துக்ளக் இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வங்கி அதி காரிகளை, ஊழியர்களை “கழி சடைகள்” என்று வசை மாரி பொழிந் துள்ளார். மிக நாகரீகமாக பொருள் கூறினால் “உதிர்ந்த ரோமம்” என்பதே. இலட்சக்கணக்க்கான வங்கி ஊழியர்கள் மிகுந்த மனக் காயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.
வங்கி அலுவலர்களோடு குரு மூர்த்தியின் விமர்சனம் நிற்க வில்லை. சி.வி.சி. போன்ற அமைப்பு களின் செயல்பாடுகளையும் தர்க்க நியதி இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார். அதற்கு தீர்வாக அரசின் பங்குகளை அரசு வங்கிகளில் 51 சதவீதத்தில் இருந்து 49 சதவீதத்திற்கு குறைப்பதே வழி என்றும் கூறியுள்ளார். தனியார் நிதி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி வரும் செய்திகளை மக்களும் அறிவார்கள். அமலாக்கப் பிரிவு ஒரு பிரபல தனியார் வங்கி யின் உயர் பொறுப்பில் இருந்த வர்கள் பற்றி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை பல கதைகளை பேசுகிறது. உயர்ந்த பொறுப்பில் இருப்ப வர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு அவர்களின் முன்னிலையி லேயே அநாகரீகமாக பேசியிருக் கிறார். மேலும் வங்கி ஊழியர் கள் நிதியமைச்சரின் கீழ் பணி யாற்றுபவர்கள். கோவிட் காலத்தில் அளப்பரிய பணியை பல இன்னல்க ளுக்கு மத்தியில் ஆற்றியுள்ளார் கள். அதை அக்கூட்டத்தின் நிதிய மைச்சரின் உரையும் அங்கீகரித்துள் ளது. நிதி அமைச்சர் அவர்களே! குரு மூர்த்தியின் அநாகரீகமான வார்த்தைகள் வெளிப்படையாக கண்டிக்கப்பட வேண்டும். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் - குரு மூர்த்தி உட்பட - எந்த பகுதி தொழிலாளர்களின் கௌரவத்தை யும் பாதிக்கிற வகையிலான பொறுப் பற்ற பேச்சுக்களை பொது நிகழ்ச்சி களில் பேசக் கூடாது என அறி வுறுத்தப்பட வேண்டும். உடனடியாக அவர் வகிக்கும் உயர் பொறுப்பின் மதிப்பையும் சீர் குலைக்கிற குருமூர்த்தியின் “கழிசடை” கூற்றை நிதி அமைச்சர் கண்டிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.