மதுரை, மே 24 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மறைந்த முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில துணைத் தலைவருமான மேடைக் கலைவாணர் தோழர் என். நன்மாறன் நினைவேந்தல் மற்றும் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி திங்க ளன்று நீதிநாயகம் கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். கலைச்செல்வன், எம். ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது .தோழர் என். நன்மாறன் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி னார். தமுஎகச மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், அமைப்பின் மாநில பொதுச் செய லாளர் எம். ராமகிருஷ்ணன், மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜே. ஆர். ஜெரோம் எரோணிமோஸ், சித்தர் சிங்காரவேலு, மாநிலத் தலை வர்கள் மூசா, ப.மாரிமுத்து, தென்னிந்திய திருச்சபை மதுரை மற்றும் முகவை மண்டலம் அருட்திரு. டாக்டர். யாக்கோபு, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ். ஏ. லியாகத்அலி, செயலாளர் ஏ. காஜா முகைதீன், அருட் பணியாளர் பால் மைக்கேல், அருட்தந்தையர்கள் அருள்சந்திரன் அருள், எஸ். பெனடிக்ட், பால் பிரிட்டோ, பரவை காய்கறி வணிக வளாக சங்க தலைவர் முனைவர் மனுவேல் ஜெயராஜ், வழக்கறிஞர் அ. மகபூப்பாட்ஷா, சோக்கோ அறக் கட்டளை இணை இயக்குநர் வழக்கறி ஞர் எஸ். செல்வகோமதி உள்ளிட்ட பலர் தோழர் என். நன்மாறனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.