tamilnadu

img

சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் தோழர் பேயத்தேவன் காலமானார்

தேனி,ஜுன்.28- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும்,அரசு ஊழியர் சங்க தேனி மாவட்ட தலைவருமான தோழர் பேயத்தேவன் வெள்ளி யன்று அதிகாலையில் கால மானார். அவருக்கு வயது 59.  அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, அரசு ஊழியர் சங்க தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளியன்று அதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் தாஜுதீன் தலைமையில் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  சி.  முருகன், இ.தர்மர், சு.வெண் மணி, இரா.லெனின்,  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தேனி மாவட்ட செயலாளர் ராம்குமார்,  சத்துணவு சங்கம் மாநிலத் தலைவர் கலா, பொதுச் செயலாளர் மலர்விழி, அங்கன் வாடி ஊழியர்  - உதவியாளர் சங்கம் சாந்தி அம்மாள், அனைத்துத்துறை ஓய்வூதி யர்கள் சங்க தலைவர்கள் பா. ராமமூர்த்தி, கே.துரைராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பாண்டி, பழனிச்சாமி, விஜயகுமார், நிலவழகன்  சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் லட்சுமி, மாவட்ட செயலாளர் பவானி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், பொ.அழகு ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

;