tamilnadu

img

சித்தாந்தத் தெளிவோடு மக்கள் பணியாற்றியவர் தோழர் ஆ.அடைக்கலம்...

மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் மார்க்சிய சித்தாந்த வழியில் எளிமையாக மக்கள் பணியாற்றியவர் தோழர் ஆ.அடைக்கலம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன்.

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலசெயற்குழு உறுப்பினர் அ.மணவாளனின் தந்தையுமான தோழர் ஆ.அடைக் கலம் கடந்த ஆண்டு அக்.27 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். தோழரின் முதலாமாண்டு புகழஞ்சலி படத்திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை மேலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஐ ஒன்றியச் செயலாளர் க.மெய்யர் தலைமை வகித்தார். மாவட்டக்குழுஉறுப்பினர்கள் ம.முத்தையா, சி.பெரியவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோழர் ஆ.அடைக்கலத்தின் உருவப் படத்தை திறந்து வைத்து சிபிஐதேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன்பேசியது: மேலூர் தாலுகாவில் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த தோழர் ஆ.
அடைக்கலம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர்.கம்யூனிஸ்ட்டுகள் அடக்குமுறை காலத்தை சந்தித்தபோது நெஞ்சுரத் தோடு கட்சிப் பணியாற்றிவர் தோழர் அடைக்கலம். இயக்கத்திற்குள் வரும்இளைஞர்களை ஊக்குவித்து சிறந்த ஊழியராக வளர்த்தெடுப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழஞ்சலி உரைநிகழ்த்திய சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, எதிர்கால உலகம் இடதுசாரிகள் கையிலா? வலதுசாரிகள் கையிலா? போட்டிவலுவாக நடைபெற்றுக் கொண்டிருக் கும் காலம் இது. சீனா போன்ற நாடுகளின் அபரிமிதமான வளர்ச்சியும், உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள் இடதுசாரிப்பாதைதான் மக்களைப் பாதுகாக்கும் என்று சிந்திக்கத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் இடதுசாரிகள் மீது பல்வேறு வகையான அவதூறுகளை முதலாளி வர்க்கம் பல்வேறு வகையில் கட்டவிழ்த்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்கு தோழர் அடைக்கலம் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை நமக்கு பாடமாக அமைந்துள்ளது என்றார்.நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கே.சதாசிவம், திமுக மேலூர் நகரச் செயலாளர் யு.முகமது யாசின், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் எஸ்.மகாதேவன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.கண்ணன் உள் ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர். இறுதியில் அறிவியல் இயக்க மாநிலசெயற்குழு உறுப்பினர் அ.மணவாளன்நன்றி கூறினார்.