tamilnadu

img

நிவாரணம் கோரி ஊழியர்கள் மறியல் போராட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 23 - மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளருக்கு நிவார ணம் வழங்கக் கோரி துப்புரவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சேகரிக்கப் படும் குப்பைக் கழிவுகள், கோட்டை வாசல் குப்பைக் கிடங்கில் மொத்த மாக கொட்டப்படுகிறது. வியாழ னன்று காலை நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 165 பேர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். குப்பைகளை கோட்டைவாசல் படி அருகே உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் சென்று, அங்கு கொட்டும் பணியில் கும்பகோண த்தைச் சேர்ந்த நகராட்சி டிப்பர் வாகன ஓட்டுநர் ஜோதி மற்றும் நாகூர் அமிர்தா நகரைச் சேர்ந்த ஒப்பந்த துப்புரவுப் பணியாளர் விஜய் ஆகி யோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குப்பைக் கிடங்கு வழியாக தாழ்வாகச் செல்லக் கூடிய உயர் அழுத்த மின் கம்பி யில் டிப்பர் லாரி உரசி உள்ளது. இதில் குப்பை ஏற்றி வந்த வாக னம் தீப்பிடித்து எரிந்தது. இந்த வாகனத்தில் இருந்த தூய்மை பணியாளர் விஜய் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகன ஓட்டுநர் ஜோதி மின்சாரம் தாக்கியதில் படுகாய மடைந்தார்.  

அங்கு பணியில் இருந்த ஊழி யர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், வாகனத்தின் தீயை அணைத்து விஜ யின் சடலத்தை மீட்டு நாகப்பட்டி னம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்குப் போராடிய ஓட்டு நர் ஜோதியை நாகை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதை கண்டித்து, துப்புரவுப் பணியாளர் கள் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் நடந்த பேச்சு வார்த்தையில், உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணமும், அவரது குடும்பத்திற்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும். படுகாயமடைந்த ஓட்டுநருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் வலியுறுத்தினர்.  இதைத்தொடர்ந்து, பணி நிய மன ஆணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் உறுதி அளிக்கப் பட்டது. மாலை 3 மணிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி தற்கா லிகமாக போராட்டத்தை கைவிட்ட னர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் திடம் வைக்கப்பட்ட கோரிக்கை களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதனால், தூய்மைப் பணியாளர் விஜயின் உடலை வாங்க மறுத்து, தம்பிதுரை பூங்கா எதிரில் மீண்டும் மாலை 4 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, அரசு தரப்பி லும், நகராட்சி தரப்பிலும் நடந்த  பேச்சுவார்த்தையில், கோரிக்கை களை நிறைவேற்றுவோம் என அதிகாரிகள் கூறினர். மேலும், இது  போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிக ழ்வதாக துப்புரவுப் பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.