tamilnadu

img

தமிழகச் சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்களை நிறுத்திப் போராட்டம்

சென்னை,டிச.10-  பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக டிசம்பர் 10 அன்று பகல் 12 மணியளவில் மாநிலம் முழு வதும்  700-க்கும் மேற்பட்ட  மையங் களில் நடைபெற்ற 10 நிமிடம் வாகன நிறுத்தப்போராட்டத்தில் 25 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்கேற்றனர்.  இந்த போராட்டத்தின் போது சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டன, இந்த போராட்ட த்திற்கு ஆதரவளித்த வாகன ஓட்டிகளுக்கு சிஐடியு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள் கிறோம்.

சிஐடியு மாநிலக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 நிமிட  வாகன நிறுத்தப்போராட்டத்திற்கான பிரச்சாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று 15 லட்சத்திற்கும் மேற் பட்ட துண்டறிக்கைகள் பொது மக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டன. இந்த பிரச்சாரத்தில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கம், வாலிபர், மாதர், மாணவர் அமைப்பு கள் பங்கெடுத்தன. அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலைபோக்குவரத்து சங்கங்கள் பேருந்துநிலையங்கள், ஆட்டோ நிறுத்தங்கள், பெட்ரோல் பங்குகள், டோல்கேட்டுகள் உள்ளிட்ட இடங் களில் பிரச்சாரங்களை மேற் கொண்டன.

சென்னையில் பல்லவன் சாலை யில்  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் கே.திருச்செல்வன், எம்.சந்திரன், ஆ.கிருஷ்ணமூர்த்தி, மாநகர போக்குவரத்து சங்க பொதுச செயலாளர் தயானந்தம், அரசு விரைவு போக்குவரத்து சங்க பொரு ளாளர் ரவி உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.  சிஐடியு உதவி பொதுச்செய லாளர்கள் வி.குமார் ராயபுரத்திலும்  எஸ்.கண்ணன் செங்கல்பட்டிலும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த போராட்ட செய்தியினை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி யை தெரிவித்துக் கொள்கிறோம். வேலுர், திருச்சி மாநகர், காஞ்சி புரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களில்  500-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு கைது செய்யப்பட்ட வர்களை விடுதலை செய்ய வேண்டும்.  அவர்கள் மீது போடப் பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.  கோவையில் பறிமுதல் செய்த ஆட்டோக்களை திரும்ப ஒப்படைக்க  வேண்டும்  என்று சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.