சென்னை,ஜூலை 15- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவித்திருக்கிறது. கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோ தனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனது வீட்டி லேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை காவேரி மரு த்துவமனையில் வியா ழனன்று (ஜூலை 14)அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத் துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட் டுள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கோவிட் பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்கு மாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். எனவே,மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட் டுள்ளது.