கொச்சி, மே 13- கேரளத்தில் வளர்ச்சிக்கான முக்கிய இலக்காக மாறியுள்ள திருக் காக்கரை இடைத்தேர்தல் பிரச்சா ரத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகை வாக்காளர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளரின் சிறப்பையும், அர சின் வளர்ச்சி சாதனைகளையும் எடுத்துரைத்து, பிரச்சாரத்தில் முன்னணியில் இருக்கும் எல்.டி.எப்., வுக்கு முதல்வரின் வருகை, மேலும் உற்சாகம் அளித்துள்ளது. இடது ஜனநாயக முன்னணியின் வளர்ச்சி அரசியலுக்கு காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் ஆதர வளிப்பதால் தேர்தல் களத்தின் சித்திரம் மாறி வருகிறது. எல்டிஎப் வேட்பாளர் டாக்டர். ஜோ ஜோசப் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். ஏழை நோயாளிகளைப் பராமரித்து, அவர்களுக்கு வாழ்வளித்து வந்த பிரபல மருத்துவரான இவர் வாக்கா ளர்களின் இதயங்களில் இடம் பிடித் துள்ளார். இதன்மூலம் வேட்பாளரை முன்னிறுத்தி அனுதாபம் பெறும் எதிர்கட்சியின் முயற்சி தோல்வி யடைந்தது. திருக்காக்கரையை கொச்சியின் வளர்ச்சி மையமாக மாற்ற மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஆதரவாக எல்.டி.எப் வாக்குகளை கோருகிறது.
ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்டம் திருக்காகரையை மையமாக கொண்டுள்ளது. பணி நிறைவடைந்துள்ள வாட்டர் மெட்ரோ வின் மையமாகவும் திருக்காகரை உள்ளது. முன்மொழியப்பட்ட கே ரயி லில் மாவட்டத்தில் உள்ள ஒரே ரயில் நிலையம் திருக்காகரையில் அமைகிறது. இவற்றுடன் கொச்சி யின் பயண மையமாக திருக்காக் கரை இருக்கும். இந்த வளர்ச்சியை தடுக்க யூடிஎப் மற்றும் பாஜக நடத்தும் சதி குறித்தும் தேர்தலில் பேசப்படுகிறது. இன்ஃபோபார்க் இரண்டாம் கட்டத்தின் வளர்ச்சி, காக்கநாடு முதல் கொரட்டி மற்றும் சேர்த்தலா வரையிலான ஐடி தாழ்வா ரங்கள் (ஹப்), உத்தேச சர்வதேச வர்த்தக மையம் மற்றும் முன்மொழி யப்பட்ட சாலைகள் உட்பட எல்.டி.எப் அரசாங்கத்தின் திருக்காகர மேம்பா ட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுடன் இயைந்து செயல்பட, எல்டிஎப் சட்டமன்ற உறுப்பினரின் தேவை முக்கியமானது.
போர்க்களத்தில் ராணுவத்தை தடுப்பதுபோல் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தாமஸின் மனைவி உமா காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதனால் யு.டி.எப் மற்றும் காங்கிர ஸில் நெருக்கடி மேலும் வலுவடை ந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைந்து வரும் நிலையில், இந்த முறை பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வியாழனன்று (மே 12) மாலை எல்டிஎப் வேட்பாளர் டாக்டர். ஜோ ஜோசப்பை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ், எல்டிஎப் ஒருங்கிணைப் பாளர் ஈ.பி.ஜெயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கானம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.ராஜீவ், தேர்தல் குழுச் செயலர் எம்.சுவராஜ், மாவட்டச் செயலர் சி.என்.மோகனன், அமைச்சர்கள் அந்தோணி ராஜு, அகமது தேவர்கோவில், எல்டிஎப் தலைவர்கள் ஜோஸ் கே.மாணி எம்.பி, சி.சாக்கோ, ராமச்சந்திரன் கட னப்பள்ளி, பினோய் ஜோசப், ஜார்ஜ் எடப்பாடி, மேத்யூ டி தாமஸ், சாபு ஜார்ஜ், ஏ.பி.அப்துல் வஹாப், வர்கீஸ் ஜார்ஜ், டாக்டர்.கே.ஜி.பிரேம்ஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.