திண்டுக்கல், டிச.3- சர்வதேச மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன் னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற் பட்ட இடங்களில் தமிழநாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிக்ள மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பாக கொடி யேற்றப்பட்டன. பழனி ஒன்றியம் பால சமுத்திரம் கிராமத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு பழனி தங்க ரத அரிமா சங்கத்துடன் இணைந்து போர்வைகள் வழங்கப் பட்டன. மாவட்டச்செயலா ளர் பகத்சிங், ஒன்றியச்செய லாளர் கண்ணுச்சாமி, ஒன்றி யத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்ட னர். மதுரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் அல்லி குண்டம் கிளையில் கொடியேற்றப்பட்டது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன், உசி லம்பட்டி ஒன்றியச் செயலா ளர் ஏ.சின்னச்சாமி, தலைவர் பி.நாகராஜ்.டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆர். குட்டிராஜா, தலைவர் சி. செல்வக்குமார் மற்றும் 40க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.