tamilnadu

img

பட்ஜெட் விமர்சனம் - ஒன்றிய பட்ஜெட் 2022-23

‘உயிர்வாழ அனுமதித்தது’  ஒன்றே போதாதா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தற்போதுள்ள தனிநபர் வருமான வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படாததால், சமூக வலை தளவாசிகள் பலர் ‘மிடில் கிளாஸ்’ மீம்ஸைப் பகிர்ந்துள்ள னர். வருமான வரித்துறை (#IncomeTax) டுவிட்டரிலும் அது டிரெண்டானது. “நடுத்தர வகுப்பினர் [மக்கள்] சுவாசிக்கவும், தண்ணீர் குடிக்கவும் மற்றும் உணவு உண்ணவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?” என்ற அந்த டுவிட்டர் பதிவு டிரெண்டானது.

நடுத்தர மக்களுக்கு  மோடி அரசு துரோகம்!

ஒன்றிய அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர மக்க ளுக்கு செய்யும் துரோகம் என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். “இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கம் தொற்றுநோய் காலத்தில், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் பணவீக்கத்தை முறியடிக்கும் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், நேரடி வரி நட வடிக்கைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் மீண்டும் ஆழ்ந்த ஏமாற் றத்தை அளித்துள்ளனர்” என்று டுவிட்டரில் அவர் பதி விட்டுள்ளார்.

முதலாளிகள் உதய் கோடாக், அனில் அகர்வால் மகிழ்ச்சி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் துள்ள பட்ஜெட், “வரி செலுத்துவோர், தொழில்முனை வோர், முதலீட்டாளர்கள் மீது நம்பிக்கை கொண்டி ருப்பதாக கோடாக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டாக் மகிழ்ச்சி தெரி வித்துள்ளார். “நான் இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று புல்லரித்துள்ளார். “வளர்ச்சி சார்ந்த மற்றும் முன்னோக்கிய மற்றும் மக்களுக்கான பட்ஜெட் இது” என்று ‘வேதாந்தா’வின் அனில் அகர் வாலும் கொண்டாடியுள்ளார்.

2047 புதிய இந்தியாவுக்கு அடித்தளம் இந்த பட்ஜெட்!

ஒன்றிய அரசின் பட்ஜெட் இந்தியப் பொருளாதா ரத்தின் அளவை மாற்றி நாட்டை தன்னிறைவு அடையச் செய்யக் கூடியது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். “இது ஒரு தொலைநோக்கு பட்ஜெட்” என்று கூறியிருக்கும் அமித் ஷா, இந்த  பட்ஜெட் “சுதந்திரத்தின் 100-வது ஆண்டில் அமைய வுள்ள புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக் கும்” என்று 25 ஆண்டுகள் கழித்து வரப்போவதற்கு இப்போதே ஆரூடம் கூறியுள்ளார். 

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்  நம்பமுடியாத அறிவிப்பு!

2022-23 நிதியாண்டு முதல் ரிசர்வ் வங்கியால், டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை, “இது பட்ஜெட் 2022-இன் நம்பமுடியாத அறிவிப்பு” என்று  ‘பேடிஎம்’ (Paytm) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா டுவீட் செய்துள்ளார். இந்த நடவடிக்கையை “மாற்றம்” என்றும், “இந்த நடவடிக்கை யின் முக்கியத்துவம் நினைவுகூரத்தக்கது” என்றும் ‘ஸ்னாப்டீல்’ தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால்  புளகாங்கிதம் அடைந்துள்ளார். 

வைரம், ரத்தினங்களின் விலை குறையும்?

பட்ஜெட் அறிவிப்பில், சுங்க வரியை அரசாங்கம் குறைத்துள்ளதால், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் விலை குறையும் என்று கூறப்படு கிறது. மேலும், தோல் பொருட்கள், உடைகள், எஃகு கழிவு கள், மொபைல் போன்கள், மொபைல் போன் சார்ஜர்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பயன்படுத்தப் படும் ரசாயனங்கள் ஆகியவையும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குடைகள், இறக்குமதி பொருட்களின் விலை உயரும்

2022-23 பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ள தால், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பொருட் களின் விலை அதிகரிக்க உள்ளது. குடைகள், ஒற்றை அல்லது பல ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள், ஸ்மார்ட் மீட்டர்கள், சோலார் தொகுதி கள், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொம்மை களின் பாகங்கள் விலைகள் உயர உள்ளன.

பட்ஜெட் உரையில்  மகாபாரத ஸ்லோகம் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்க லின்போது, நேரடி வரிகள் பற்றி பேசினார். அப்போது, பிரதமர் மோடி தர்மத்திற்கு இசைவாக வரிகளை வசூ லிக்கவில்லை என நிர்மலா நினைத்தாரோ என்னவோ, மகாபாரதத்தின் ‘சாந்தி பர்வ அத்யாய’ வசனத்தை குறிப்பிட்டார். “அரசர் மக்களுக்கு யோகக்ஷேமத்திற்கு (நலன்) ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், எந்தவொரு தளர்ச்சியையும் விட்டுவிட்டு, தர்மத்தின்படி மாநிலத்தை ஆள்வதன் மூலம், தர்மத்திற்கு இசைவான வரிகளை வசூலிக்க வேண்டும்” என்பதே அந்த ஸ்லோகம் ஆகும்.

‘செஸ்’ சட்டத்திற்குப் பதில் புதிய சட்டம்!

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) சட்டத் துக்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். “இது நிறுவன மற்றும் சேவை மையங்களின் வளர்ச்சியில் மாநிலங்களை பங்கு தாரர்களாக மாற்ற உதவும். இது தற்போதுள்ள தொழில் துறை பகுதிகளை உள்ளடக்கும் மற்றும் ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.