புதுதில்லி, மார்ச் 23- பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பல்வேறு வழிகளிலும் சீரழித்திட ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கை களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: ஒன்றிய அரசு பிஎஸ்என்எல்-இன் வாடிக்கை யாளர் சேவைகளையும், ஊழியர்கள் நலன்களை யும் சீரழிக்கக்கூடிய விதத்தில் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசு இந்திய மற்றும் வெளிநாட்டுத் தனியார் கார்ப்ப ரேட்டுகள் அளித்திடும் அழுத்தத்திற்கு உட்பட்டு அவர்களின் நலன்களுக்காகவே வேலை செய்து வருகிறது. 2019 ஜனவரியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் 80 ஆயிரம் ஊழியர்களை ஒரே தவணை யில் ஆட்குறைப்பு செய்தது. இது அதில் வேலை செய்த 80 சதவீத ஆட்களைக் குறைத்ததோடு, 50 சதவீதம் அளவிற்கு ஊதியக் குறைவுக்கும் காரணமாக இருந்தது.
4ஜி வழங்காமல் வஞ்சகம்
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக் கிறது. ஒன்றிய அரசு, 4ஜி அலைக்கற்றையை அளித்திட அனுமதிக்காததால், சேவையின் தரம் அழிந்துகொண்டிருக்கிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 14197 டெலிகாம் டவர்களையும் மற்றும் 2.86 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் தேசியப் பணமாக்கல் திட்டத்தின்கீழ் கொண்டு வந்திருப்பதன்மூலம், நாட்டின் செல்வத்தை, இந்திய மற்றும் வெளி நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் அடிமாட்டு விலை க்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒருபக்கம் அழித்திடும் அதே வேலையைச் செய்து கொண்டே மறுபக்கத்தில் தனியார் தொலைத் தொடர்பாளர்களுக்கு எந்தத் தடையும் இல்லா மல், உயர்தர நெட்வொர்க்குகள்/உபகரணங் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு 4ஜி, 5ஜி சேவை களை வழங்குவதில், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ள வெளி நாட்டுத் தொலைத் தொடர்பாளர்களோடு பிஎஸ் என்எல் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தக் கடினமான சூழ்நிலையில், மறுசீரமைப்பு என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதென்பது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழித்திடும். எனவே பிஎஸ்என்எல்-ஐ சீரழிக்கும் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசா ங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படும் சங்கங்கள் அனைத்தையும் அழைத்துப்பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் 4ஜி, 5ஜி சேவைகளை பிஎஸ்என்எல் மூலம் அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார். (ந.நி.)