வீனஸ் பள்ளியில் தாய்ப்பால் வார விழா
சிதம்பரம், ஆக. 10- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட இந்திய குழந்தை நல மருத்துவ குழுமம், இன்னர் வீல் சங்கம் ஆகியவை இணைந்து உலக தாய்ப்பால் வாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு வீனஸ் கல்வி குழுமத்தின் நிறுவனர் வீனஸ் எஸ். குமார் தலைமை தாங்கினார். இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கோமதி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். வீனஸ் பள்ளியின் முதல்வர் நரேந்திரன் வரவேற்றார். இவ்விழாவிற்கு கடலூர் சுரேந்திரா பன்நோக்கு மருத்துவமனையின் தலைவர் பா.ராஜேந்திரன், ரோட்டரி கிளப் தலைவர் எம். கனகவேல், கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ். ரமேஷ், இந்திய குழந்தை நல மருத்துவ குழுமம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சிவப்பிரகாசம் ஆகியோர் தாய்பாலின் அவசியத்தையும் தாய் பால் அருந்துவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பேசினர். விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்துகளின் அவசியம் குறித்த நூலினை வீனஸ் பள்ளி குழுமத்தின் தாளாளர் ரூபியால்ராணி வெளியிட பள்ளியின் நிறு வனர் வீனஸ் குமார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பள்ளியின் ஆங்கில ஆசிரியை சுபஸ்ரீ தொகுத்து வழங்கினார்.