பாட்னா, டிச.12- “பாஜக ஒரு பெரிய யானை; எனவே, அனைவரும் சேர்ந்து எதிர்த்து சண்டையிட்டால் மட்டுமே அதனை வீழ்த்த முடியும்” என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் எதிர்க்கட்சிகள் அனைத்துக்குமே வாழ்வா சாவா, போராட்டம்தான் என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் நிதிஷ் குமார் செய்தியாளரு குளுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக் குமே வாழ்வா, சாவா? தேர்தலா கவே இருக்கப் போகிறது. நாட்டின் நலனுக்காக இந்த தேர்தலில் பாஜக வை நாம் தோற்கடித்தே ஆக வேண் டும். ஆனால், அது அவ்வளவு எளி தானது அல்ல. பாஜக ஒரு யானையை போன் றது. அதை தனித்தனியாக நின்று தோற்கடிக்க முடியாது. அனைவரும் சேர்ந்து நின்று சண்டையிட்டால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு அணியில் நிற்க வேண்டும். அது மூன்றாவது அணியாக இருக்கக் கூடாது. பிரதான அணியாக இருக்க வேண்டும். இதை சாத்தியமாக்கு வதற்குதான் நான் முயற்சித்து வரு கிறேன்.
வருகிற தேர்தலுக்காக அமைக் கப்படும் கூட்டணிதான் பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியாக இருக்கும். அவ்வாறு பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சி கள் ஓரணியில் திரண்டால் 2024 நாடா ளுமன்ற தேர்தலில் மெகா வெற்றி அடையும் என்பது உறுதி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கி ரஸ் அல்லாத மூன்றாம் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக நம்பத்தகுந்த கட்சி கிடை யாது. அது கூட்டணியில் இருக்கும் கட்சியையே வீழ்த்த முயற்சிக்கும். 2020 சட்டமன்றத் தேர்தலில் எங்களு டன் கூட்டணியில் இருந்துகொண்டே எங்கள் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்த கட்சிதான் பாஜக. பீகாரில் கடந்த 2005, 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எங் கள் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) குறைவான இடங்களைப் பெற்ற தில்லை என்பதை அவர்கள் (பாஜக) நினைவில் கொள்ள வேண்டும். 2020-இல் நடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்ய அவர்கள் (பாஜக) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட் டோம். பாஜகவினரின் அழுத்தத்தால் ஊடகங்கள் பல உண்மைகளை மறைத்து வருகின்றனர். பாஜக ஆட்சி யில் இருந்து தூக்கி எறியப்படும் போது, ஊடகங்கள் மறைத்த உண் மைகள் வெளிக்கொண்டு வரப்படும். இவ்வாறு நிதிஷ் குமார் கூறி யுள்ளார்.