சென்னை, ஜன. 1- பாஜக என்பது காற்ற டைத்த பலூன் என்றும் அது எப்போது வேண்டு மானாலும் வெடிக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தவறு நடக்கும் இடத்திற்கு முதல் வர் செல்கிறார், தவறா னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தால் கூட கண்டிக்கப் படுகிறார்கள். இதை காங்கி ரஸ் கட்சி வரவேற்கிறது. மேலும் விவசாயம், தொழில், கல்வி போன்ற துறை களில் சீர்திருத்தம் தேவைப் படுகிறது. ஜனவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஏலகிரியில் தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறை களை பின்பற்றி இந்த முகாம் நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதற்கு மீண்டும் அடைப்பு என்பது தேவை யில்லாத ஒன்று. முகக்க வசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற வற்றை கடைபிடிக்க வேண்டும். மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம், கலாச்சாரம் சீரழிந்துள்ளது. பாஜக என்பது காற்றடைத்த பலூன் போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக் கும். பாஜக ஆளும் கர்நாடகா வில் நடைபெற்ற உள்ளா ட்சித் தேர்தலில் பாஜக தோற் றது போல், இனி நாட்டில் இருந்து பாஜக அகற்றப்படும் என்றார்.