tamilnadu

img

ஆண்டிமடத்தில் ஆட்டோ சங்க பேரவை: புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆண்டிமடத்தில் ஆட்டோ சங்க பேரவை:  புதிய நிர்வாகிகள் தேர்வு

அரியலூர், ஆக. 12-  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் ஆர்.பிரபுகுமார் தலைமையில் நடைபெற்றது.  சங்கம் சம்மந்தமாக சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி விளக்கி பேசினார். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் எ.சத்தியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக ஆர்.பிரபுகுமார். செயலாளராக எம்.ஆறுமுகம். பொருளாளராக சி.ஆரோக்கியசாமி துணைத் தலைவராக கே.கலையரசன், துணைச் செயலாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  ஆண்டிமடம் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல்  ஆட்டோ ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் ஆட்டோ ஓட்டுநர் மீது அபராதம் போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தொடர்ந்து ஆக.12 முதல் சிஐடியு சங்கத்தோடு இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆட்டோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.