சென்னை, பிப். 1 - காவல்துறை அதிகாரிகள் 17 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பத்துரை தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலை யில் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணை யத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதற்கு மாறாக, ஜன.29 ஆம் தேதி உள்துறை செயலாளர் 17 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு செவ்வாயன்று (பிப்.1) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடமாற்றம் செய்ய ப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்பு இல்லை. இந்த இடமாற்றத் திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. வழக்கறிஞர்கள் பொது நல வழக்குகள் தொடர்வதை உச்ச நீதி மன்றம் கண்டித்துள்ளது. அரசியல் காரணமாக தொடரப்பட்ட இந்த வழக்கு பொது நல வழக்கு அல்ல. தனிநபர் நல வழக்கு என்று கண்டனம் தெரிவித்தனர். பொது நல வழக்கை தவறாக பயன்படுத்தியதால், அபரா தத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக இன்பதுரை தரப்பில் தெரி விக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளு படி செய்தனர்.