மியான்மரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினார் என்ற காரணத்திற்காக அந் நாட்டில் ஜனநாயகத்தை மீட்ப தற்காகப் போராடி வரும் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜன நாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் அந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை என்று மியான்மர் ராணுவம் குற்றம் சாட்டியது. அதோடு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. மக்களிடம் செல் வாக்கு பெற்ற ஆங் சான் சூகி மீது 12 வழக்குகளைப் பதிவு செய்தனர். கடந்த மாதத்தில் இரண்டு வழக்குகளில் வந்த தீர்ப்பின் படி, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
உடனே ராணுவத் தலைமை ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. அந்தத் தண்ட னையை இரண்டாண்டு சிறைத் தண்டனையாகக் குறைப்பதாக அறிவித்தனர். ஆனால், தற்போது மற்றொரு வழக்கில் அவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவரும், 76 வயது நிரம்பியவருமான ஆங் சான் சூகி, தீவிர அரசியலில் ஈடுபடு வதைத் தடுக்கவே இத்தகைய பொய் வழக்குகளைப் போடு கிறார்கள் என்று அவரது ஆதர வாளர்கள் மட்டுமில்லாமல், நடுநிலை ஆய்வாளர்களும் கூறி யுள்ளனர். அவர் மீதான வழக்கு கள் எவ்வாறு விசாரிக்கப்படு கின்றன என்று வெளியில் தெரி வதில்லை. பத்திரிகையா ளர்களுக்கு நீதிமன்றத்திற்குள் அனுமதியில்லை. அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் எதுவும் சொல்வதில்லை. ஆங் சான் சூகியின் வழக்கறிஞர்கள் ஏதாவது வெளியில் பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று மிரப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியுள்ள வழக்கு விசார ணைகளையும் ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.