தஞ்சாவூர், டிச.10- திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சை மாவட் டத்தில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்திய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தி னர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண் டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையை தற்போது கார்ல்ஸ் டிஸ்டிலரீஸ் நிறு வனம் ஏற்று நடத்தி வருகி றது. ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பாக்கித் தொகையை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தெரியாம லேயே, கரும்பு விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் களை ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, திருமண் டங்குடி சர்க்கரை ஆலை முன்பு 11 தினங்களாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
அவர்களுக்கு ஆதர வாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் சனிக் கிழமை தஞ்சாவூர், கும்ப கோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.வி.ச மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம். பழனி அய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி எம்.செல்வம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிபிஎம் ஒன் றிய செயலாளர் எஸ்.கந்த சாமி, விவசாயிகள் சங்க நிர் வாகிகள் கலந்து கொண்ட னர். கும்பகோணம் காந்தி பார்க் அருகில் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாய சங்க பொறுப்பாளர்கள் சுந்தர் ராஜா, பாலு, கண்ணாமணி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அரு ளரசன், மாநகரச் செயலா ளர் செந்தில் குமார், அன்பு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 இடங்களிலும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகளை காவல்துறை யினர் கைது செய்தனர்.