சென்னை,ஏப்.18- நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது முறையானது அல்ல என்றும் ஆளுநரின் செய்கை தமிழக மக்களை அவமதிக்கக்கூடிய செயல் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நான்கு நாட்கள் தொடர் விடு முறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேர வை திங்களன்று (ஏப்.18) காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக 110ஆவது விதியின் கீழ் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாசித்தார். அதன் சுருக்கம் வருமாறு: ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது.
அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக் கூடிய தேநீர் விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வு களைப் புண்படுத்துவதாகவும், சட்ட மன்ற மாண்பினை மேலும் சிதைப்ப தாகவும் அமைவதால், அதில் கலந்து கொள்ள இயலாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்குரிய மரியாதையை நாங்கள் அளிக்கிறோம். தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் எல்லை களைக் கடந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டை எப்போதும், எந்த நிலை யிலும் நாம் அனைவரும் காக்க வேண்டும்; காப்போம். தனிப்பட்ட முறை யில் எனக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டு களை விட, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய நன்மையும், பலனுமே முக்கிய மானது.
இந்தச் சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானதாகும். ஆளுநர் அனுப்பி வைக்காதது எனக்கல்ல; இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக் கூடிய செயலாகும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை, இந்தச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பிப்.8 அன்று நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.