சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறையில் திருத்தம்
சென்னை, ஆக.18 - தமிழகத்தில் சுயசான்று அடிப்படை யில் கட்டிட அனுமதி பெறும் நடை முறையில், விண்ணப்பிக்க தகுதியான வர், விண்ணப்பிக்கும் முறை, கட்டி டத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசித ழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறி விக்கையின்படி, சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடி யிருப்பு கட்டிடமாகும். இது அதிக பட்சம் ஒரு தரைதளம் மற்றும் முதல் தளம் அல்லது ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்கள் அதிகபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கட்டிட மாக இருக்க வேண்டும். இந்த கட்டிடம் கட்டவோ, மறு கட்டு மானம் செய்யவோ அனுமதி பெறுவ தற்கு, நில உரிமையாளர், நில குத்தகை தாரர் அல்லது பொது அதிகாரம் பெற்ற வர் விண்ணப்பிக்க தகுதியானவர். விண்ணப்பம் அளிக்கும்போது, மனை இடத்தின் புகைப்படம், நில உரிமையா ளர் என்பதற்கான சுயசான்றிட்ட விற்பனை பத்திரம், சுய சான்றிட்ட பட்டா அல்லது டவுன் சர்வே நில பதி வேடு ஆவணம், மனைப்பிரிவு அனுமதி அல்லது உட்பிரிவு அனுமதிக்கான ஆவணம், மனைப் பிரிவு வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். கட்டிடத்துக்கு தயாரிக்கப்பட்ட வரைபடம் தொடர் பானவற்றையும் ‘ஏ4’ தாளில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய விதிகளின்படி, தொடர் கட்டி டம் அமையும் பகுதி மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய பிரிவு பகுதி யாக இருந்தால் 1.5 மீட்டரும், இதர பகுதிகளில் 3 மீட்டரும் சாலை அகலம் இருக்க வேண்டும். அதிகபட்ச உயரம் 10 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச தளப்பரப்பு குறி யீடு 2 மடங்காகும். மேலும், சாலை அடிப்படையில் சுற்றிலும் விடப்பட வேண்டிய இடமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.