tamilnadu

img

எம்.சின்னதுரை எம்எல்ஏ-வின் கோரிக்கையை ஏற்று ரூ.281.1 கோடியில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்

புதுக்கோட்டை, மார்ச்.25-  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரையின் கோரிக்கையை ஏற்று காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.281.1 கோடி யில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து எம்.சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: புதுக்கோட்டை, திருச்சி, சிவ கங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால  கனவுத் திட்டமாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நெடுநாளைய ஏக்கப் பெருமூச்சாகவே இருந்து வந்துள்ளது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு பொதுநல அமைப்புகளும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளன. மாநாடுகளிலும், போராட்டங்களிலும் முதல் தீர்மானமாகவும், கோரிக்கையாக வும் இடம் பெற்று வந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியின் கடைசி காலத் திலும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த  நிதிநிலை அறிக்கையிலும் காவிரி,  வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் இடம்பெற வில்லை. இந்நிலையில், அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்ற நான் பேசும் போது: ‘‘காவிரி, வைகை,  குண்டாறு இணைப்புத் திட்டம்  குறித்து அறிவிப்பு ஏதுமில்லை.  7  மாவட்ட மக்களின் வாழ்வாதா ரத்தைச் சார்ந்துள்ளதால் இத்திட்ட த்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், ‘‘மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சின்னத்துரையின் கோரிக்கை யை ஏற்றுள்ள அரசு ரூ.281.1 கோடி மதிப்பில் காவிரி, வைகை, குண் டாறு திட்டம் நிறைவேற்றப்படும்’’ என்றார். இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆட்சியின் தொடக்கத்திலேயே இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக் குரியது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் சார்பிலும் தமிழக முதலமைச்சருக்கும், நிதித்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களையும் உள்ளடக்கிய வகையில் திட்ட  அறிக்கை தயாரித்து செயல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள் கிறேன். மேலும், முதியோர், விதவை கள், கணவனால் கைவிடப் பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், உழவர் பாதுகாப்புத் திட்டப் பய னாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டு மென சட்டமன்றத்தில் கோரிக்கை  வைத்திருந்தேன். இதற்கு பதி லளித்துப் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க வேண்டுமென்ற சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையின் கோரிக்கை குறித்து வாரியம் பரி சீலித்து முடிவெடுக்கும் என்றார். மேற்கண்ட விளிம்புநிலை மக்க ளின் கோரிக்கை குறித்தும் முத லமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாது எம்.சின்னத்துரை எம்எல்ஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.