மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்செவ்வாயன்று (செப். 23) நடைபெற்றது. சென்னை தெற்கு கிளை 1 மற்றும் கிளை 2 சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளை-1ன் தலைவர் டி.பண்டாரம் பிள்ளை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
