tamilnadu

img

தொழில்முனைவோராக்கும் புதிய பாடத் திட்டம்: அமைச்சர்

சென்னை,நவ.24- தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புக ளுக்கு அடுத்த கல்வி ஆண்டு (2023-24) முதல் புதிய பாடத் திட்டம் அறிமு கம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். உயர்கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அரசுப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை காமராஜர் சாலை யிலுள்ள உயர்கல்வி மன்ற  வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகங்கள் மேம்பாடு, புதிய பாடத் திட்டம் உள்ளிட்ட விவ காரங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்க ளிடம் அமைச்சர் கூறியதா வது: பொறியியல் கல்வி யைப் போன்று கலை,  அறிவியல் படிப்புகளுக் கான பாடத் திட்டத்தையும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைத்து வருகிறோம். தமிழக மாண வர்கள் திறனை மேம்ப டுத்தி, அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளில் மாண வர் சேர்க்கை குறைவாக உள்ளது. அந்த பாடப்பிரிவு களில் கணினி அறிவியல் மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களையும் இணைத்து, உயர்கல்வி மன்றம் மூலமாக புதிய  பாடத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் வரைவு தற்போது அனைத்து துணை வேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றங்கள் இருந்தால், பரிந்துரைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பல் கலைக்கழகங்களிலும் அமல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் கட்டாயம் புதிய பாடத் திட்டத்தில், கல்லூரி முதலாம் ஆண்டில் மாணவர்கள் தமிழ், ஆங்கி லம் ஆகியவற்றை கட்டாயப் பாடங்களாக படிக்கும்  வகையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதேபோல, மாணவர்கள் எந்த பாடப் பிரிவில் படித்தாலும், அவர்களுக்கு வேலைக் கான திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். மேலும், பல்கலைக் கழகங்களில் முக்கிய தலைவர்கள் குறித்த பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட உள்ளன. இதுதவிர, ஆராய்ச்சி படிப்புக்காக தமிழக அரசு ஏற்கெனவே ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பல்கலைக்கழகங்க ளைப்போல கல்லூரிக ளிலும் தேவைக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் தொடங்கஅனுமதி தரப்ப டும். மாநில அரசின்பல்கலை க்கழகங்களில் உள்ளகாலி பணியிடங்கள் கணக்கிடப் பட்டு வருகின்றன. பல்கலை க்கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தி, அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்படும். பச்சை யப்பன் கல்லூரி விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.