tamilnadu

img

நலவாரிய ஆன்லைன் பதிவில் குளறுபடி; 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

சென்னை, ஜூலை 25 - ஆன்லைன் உறுப்பினர் பதிவில் ஏற்பட்டுள்ள குளறு படிகளை சரி செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 25) தமிழ்நாடு முழுவதும்  நலவாரிய  அலுவலகங்கள் தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை விண்ணப் பித்தல் போன்றவற்றை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 3 வாரங்களாக இணையதளம் சரிவர செயல்படவில்லை. அண்மையில் 13 கோடி  ரூபாய் ‘சர்வர்’ மேம்படுத் தப்பட்டுள்ளதாக கூறப்படுகி றது. ஆனால், அற்ப காரணங்களுக்காக பணப் பயன் கோரும் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. 8 லட்சம் உறுப்பி னர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடி களை சரி செய்ய வேண்டும். கேட்பு மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து பணப்பயன்களை தர வேண்டும், ஆன்லைன் பதிவு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டவர்கள் மீண்டும்  உறுப்பினர்களாக அங்கீ கரிக்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் தர வேண்டும்,

விதவை உதவித்தொகை பெறும் முறைசாரா தொழி லாளர்கள் நலவாரிய பணப்பயன்களை மறுக்க  கூடாது, பெண் தொழிலா ளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உடலுழைப்பு நல வாரியங்களில் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும், இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகியவற்றிற்கான கேட்பு மனுக்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும், விபத்து எங்கு நடந்தாலும் ரூ.5 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும்.இயற்கை மரண நிதியை ரூ.2 லட்சமும், ஈமச் சடங்கு நிதியை 25ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னை, மத்திய  சென்னை மாவட்டத்திற் குட்பட்ட முறைசாரா சங்கங்களின் சார்பில் தி.நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மற்றும் புறநகர்  முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஏ. லதா தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலா ளர் சி.திருவேட்டை போராட்டத்தை தொடங்கி வைத்தார். எஸ்.விஜயா  (வீட்டு வேலை சங்கம்),  செந்தில்குமார் (அமைப்பு சாரா சங்கம்), உமாபதி (ஆட்டோ சங்கம்), பி.சுந்த ரம், ஜெயராமன் (தையல் சங்கம்), யு.அனில் குமார்  (முறைசாரா சங்கம்) உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் நிறை வுரையாற்றினார்.