tamilnadu

இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைப் பிடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைப் பிடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம்!

இராமநாதபுரம், ஜூலை 13 - இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமே ஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள், அதிகாலை சுமார் 2 மணி அளவில் இலங்கை காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஈசக் பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த 7 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை யும், படகையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாணம் மீன்வ ளத்துறை அதிகாரி மூலம் ஊர்காவ ற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.