tamilnadu

img

60 ஆண்டு காலப் போராட்டம் வெற்றி பட்டியலின மக்கள் ஆலய வழிபாடு

திருவண்ணாமலை, ஜன. 30-  திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் கிராமத்திலுள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் திங்களன்று (ஜன.30) தரிசனம் செய்த தன் மூலமாக பட்டியலின மக்களின் 60 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூர் கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் தை மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் அனை த்து சாதியினரும் ஒன்றிணைந்து நல் லிணக்கத்துடன் பங்கேற்றுவந்தனர். அதன்பிறகு, பட்டியலின மக்கள் அந்த திருவிழாவில் பங்கேற்கவும், பொங்கல் வைத்து வழிபடவும் பிற சமூகத்தினர் அனுமதிக்கவில்லை. கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்டது. வழிபாட்டு உரிமை மறுப்பு மட்டுமல்லாது வேறு சில தீண்டாமைக் கொடுமைகளும் இந்த கிராமத்தில் நிலவி வந்தன.

சிபிஎம் கள ஆய்வில்...

இத்தகைய தீண்டாமைக் கொடு மைகள் நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 ஆண்டு களுக்கு முன்பு நடத்திய கள ஆய்வில் கண்டறிந்தது. அதன்பிறகு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்தது. இந்நிலையில், கோயில் திரு விழாவில் பொங்கல் வைத்து தாங் களும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைதிப் பேச்சு

அதனடிப்படையில் கடந்த வாரம் (ஜன. 24) கோட்டாட்சியர் அலு வலகத்தில் அமைதி பேச்சு நடத்தப் பட்டது. இதில் இரு பிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த கூட்டத்தில் ஜனவரி 30 அன்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழி படுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அந்த முடிவை பிற சமூகத்தினர் முழுமை யாக ஏற்கவில்லை. சிலர் எதிர்ப்பு தெரி வித்தனர். ஆனால், இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய பட்டியலின மக்க ளுக்கு உரிமை உள்ளது; அவர்கள் தரிசனம் செய்யலாம் என முடி வெடுக்கப்பட்டது.

ஆலயப் பிரவேசம்

இதையடுத்து இந்த விவ காரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு செய்தது. ஆட்சி யர், காவல் துறை கண்காணிப்பா ளர், கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பட்டியலின மக்களின் வழிப்பாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், திங்களன்று (ஜன. 30) காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் பா.முரு கேஷ், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், (திருவண்ணா மலை), கி.பாலகிருஷ்ணன் (திருப்பத் தூர்), இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குநர் கே.பி.அசோக்குமார், கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த ஆலய நுழைவு குறித்து  ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 சமத்துவபுரங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அனைத்து வகையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனை வரும் பழக வேண்டும். இரு பிரிவின ரிடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு  எட்டப்பட்டுள்ளது. முத்துமாரி யம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் பொங்கலிட்டு வழிபட்டுள்ள னர்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ப.செல்வன், எஸ்.ராமதாஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், பாரி, தண்டராம்பட்டு தாலுகா செய லாளர் அண்ணாமலை, செங்கம் தாலுகா செயலாளர் எ.லட்சுமணன், பிரகாஷ் (வாலிபர் சங்கம்), வழக்கறி ஞர் எஸ்.அபிராமன், விசிக தொகுதி செயலாளர் நியூட்டன், மாவட்ட ஆவணப் பிரிவு செயலாளர் வெற்றி முரசு, செய்தி தொடர்பாளர்கள் சாரதி, சங்கத்தமிழன், ஒ.செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் பட்டியலின மக்களுடன் களத்தில் துணை நின்றனர். அதேபோல் கடந்த காலங் களில் இளங்குண்ணி, தாமரைப் பாக்கம், வரகூர் ஆகிய கிராமங் களில் கோயிலுக்குள் செல்ல தடுக்கப்பட்ட பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் சென்று வழிபாடு செய்ய களம் கண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.