tamilnadu

img

அரசு ஊழியர் சம்மேளன மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் நிர்வாகிகளாக தேர்வு

சென்னை, ஏப். 16 - அகில இந்திய மாநில அரசு  ஊழியர் சம்மேளனத்தின் தேசிய  மாநாட்டில் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தை சேர்ந்த 3  பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சம்மேளனத்தின் 17ஆவது தேசிய மாநாடு ஏப்.13 -  16  வரை பீகார் மாநிலம், பெகுசராய்  நகரில் நடைபெற்றது. 13ஆம்  தேதி மாலை பேரணி பொதுக் கூட்டத்துடன் மாநாடு தொடங்கி யது. பொதுக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலை வர் அசோக் தாவ்லே, அஜய் குமார்  எம்.எல்.ஏ, ராம்பாரி, ஏ.ஸ்ரீகுமார், சுபாஷ் லம்பா உள்ளிட்டோர் பேசினர். 14ஆம் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டை, சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் துவக்கி வைத்தார். இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தீபாசிஷ் போஸ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் சி.என்.பாரதி, பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்  செயலாளர் ஆர்.என்.பரசார், அகில  இந்திய மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் என்.எல்.ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசுத் துறையில் உள்ள  அனைத்து காலிப் பணியிடங் களையும் நிரப்ப வேண்டும், அனைத்து ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,   புதிய ஓய்வூ திய முறையை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 198 பெண்கள் உட்பட 510 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  37 பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். இதில் மு.அன்பரசு அகில  இந்திய துணைப் பொதுச் செயலா ளராகவும், மொ.ஞானத்தம்பி அகில இந்திய செயலாளராக வும், ஆ.செல்வம் தணிக்கையாள ராகவும் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.