tamilnadu

img

2022-23 ஒன்றிய பட்ஜெட் திருடன் கையில் சாவி

சென்னை, பிப். 6 - திருடன் கையில் சாவியை முழுமை யாக ஒப்படைத்த கதைதான்  2022-23 ஒன்றிய பட்ஜெட் என்று பொருளாதார அறிஞர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா  விமர்சித்துள்ளார்.  2022-23 ஒன்றிய பட்ஜெட் குறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதும், அதல பாதா ளத்திற்கு வீழ்ச்சி அடைந்த சிறு குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்து வதும், அரசு பொதுத்துறை நிறுவனங் களைப் வலுப்படுத்த வேண்டியதும் தான் அரசின் தற்போதைய தேவை. மேலும் இவற்றுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெரும் முதலாளிகளி டம் இருந்து வரியாக வசூலிக்க வேண்டி யதும் மற்றும்  அதற்கான வரிக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தற்போதைய சூழலின் அவசிய தேவை.

ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக இந்த பட்ஜெட் அடித்தட்டு மக்களிடமிருந்து பெறப்படும் மறைமுக வரியை அதிகப்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை பெருநிறு வனங்களுக்கு வட்டியாக செலுத்தி அவர்களின் பலத்தை மேலும் அதி கப்படுத்துவதற்கு ஏதுவான தளத்தை உருவாக்கிக் கொடுக்க கூடியதாக இது அமைந்துள்ளது.  அதேபோல கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு விவசாயத் துறையில் அப ரிமிதமான  வளர்ச்சி அடைந்து உள் ளோம்; விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போகிறோம் என்பது போன்ற அறிவிப்புகளை ஒருபுறம் கொடுத்துக் கொண்டு, மற்றொரு புறத்தில் உரம், உணவு மற்றும் எரி பொருள் மானியம் ரத்து செய்யப் பட்டிருப்பது என்பது ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் இது போன்ற மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய மானியங் களில் அரசு செலவிடக் கூடிய தொகை  ஐந்து லட்சம் கோடிக்கும் குறைவு. ஆனால் அதே சமயத்தில் அரசின் கூட்டா ளிகளான பெரும் முதலாளிகளுக்கு அரசு வெறுமனே வட்டியாக கொடுக்கும் தொகை மற்றும் அரசு நிராகரித்த மானியத் தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.  அதே போல பொருளாதார ஆய்வ றிக்கையில் வேலைவாய்ப்பின்மை கொரோனா வருவதற்கு முந்தைய நிலைக்கு திரும்பிவிட்டதாக கூறுகிறது. மற்றொருபுறம் இந்தியாவில் சாதாரண வேலை கூட கிடைக்காத மக்களின் சதவீதம் இரண்டிலிருந்து ஆறு சதவீதம் அதிகரித்து விட்டதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்த 6 சதவீத  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இல்லை. 

அதேபோல கொரோனா காலகட்டத் தில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்து விட்ட சூழலில் இதை சரி  செய்வதற்கான அறிவிப்புகள்இல்லை. குறிப்பாக கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு மூலதன சதவீதம் அதி கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூலதனம் முதலீடுகள் பெரு வாரியாக அரசின் பொதுத்துறை நிறு வனங்களை வலுப்படுத்தி மக்களுக் கான சேவைகளை கொடுப்பதற்கு பதி லாக தனியார் முதலீடுகளை ஊக்கப் படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது அரசின் அதிதீவிர தாராளமய கொள்கையை காட்டுகிறது. ஆக மொத்தத்தில் இந்த பட்ஜெட் டை வெறுமனே ஒரு பட்ஜெட் அறிவிப் பக பார்க்காமல் அரசின் கொள்கை முடி வாகவும், கடந்த 7 ஆண்டுகளில் அவர் களின் செயல்பாடுகளின் நீட்சியாகவுமே பார்க்க வேண்டி உள்ளது. ஒரே வரி யில் சொல்வதென்றால் திருடன் கையில் சாவியைக் கொடுப்பது போன்று உள்ளது இந்த பட்ஜெட்.