தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.