tamilnadu

ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை

சென்னை, பிப்.13 - ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி  3 கோடி ரூபாய் மோசடி செய்த புகார்களில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹசன் மாவட் டத்தில் அவர் கைது செய்யப் பட்டு  திருச்சி சிறையில் அடைக்கப் பட்டார். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் ரூ.3 கோடி  மோசடி  வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ராஜேந்திர பாலா ஜிக்கு விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு சம்மன் அனுப்பியது. இதையடுத்து சனிக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு அலுவ லகத்தில் ராஜேந்திர பாலாஜி விசார ணைக்கு ஆஜரானார். அவரிடம்  காலை 10 மணிக்கு தொடங்கிய  விசாரணை இரவு 9 மணிவரை  சுமார் 11 மணி நேரம் நடை பெற்றது. பண பரிவர்த்தனை விவரங்கள், புகார் விவரங்கள் அடிப்படையில் டி.எஸ்.பி.கண் ணன், ஆய்வாளர் கணேஷ்தாஸ் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.