tamilnadu

img

ரசாயன ஆலையில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு?

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் துலே பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தின் போது ஆலைக்குள் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

;