சுமார் 1000 கோடி மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தில்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.
அப்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் சுமார் 1800 கிலோ சூடாஃபீதீரின் என்ற போதைப்பொருள் தொழிற்சாலை ஒன்றின் வெளிப்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதலைத் தொடர்ந்து 3 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் அனைத்து தரப்பிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவிலேயே மிகப்பெரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் சுமார் 1800 கிலோ சூடாஃபீதீரின் என்ற போதைப்பொருள் தொழிற்சாலை ஒன்றின் வெளிப்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதலைத் தொடர்ந்து 3 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் அனைத்து தரப்பிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவிலேயே மிகப்பெரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.