tamilnadu

img

குழந்தைகளைக் கவனிக்க ஆண் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு.... மத்திய அமைச்சர் அறிவிப்பு.....

புதுதில்லி:
குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு  ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து மத்தியபணியாளர் துறை இணை அமைச்ச ரான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறிய தாவது:அரசின் ஆண் பணியாளர்களுக் கும் தற்போது குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.  ஆனால், குழந்தை பராமரிப்பு விடுமுறை ஒற்றைபெற்றோராக இருக்கும் ஆண் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

குழந்தையை தனி ஒருவராக பராமரிக்கும் மனைவியை இழந்தோர், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட வர்களுக்கும், மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கும் கூட இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. அரசுப் பணியாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான மிகப்பெரிய சீர்திருத்தம் இது.  இதற்கான உத்தரவுகள் ஏற்கனவேபிறப்பிக்கப்பட்டன. போதுமான அளவுஇவை மக்களை சென்றடையவில்லை. பணியாளர் ஒருவர் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் இருக்கும் போதும் விடுமுறையின் போது பயணம் மேற்கொள்வதற்கான சலுகையைபெற தகுதியுடையவர் ஆவார் . குழந்தை பேறு விடுமுறை முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் விடுமுறை ஊதியத்துடனும், அடுத்த 365 தினங்களுக்கு 80 சதவீத விடுமுறை ஊதியத்துடனும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.