குழந்தைகளுக்கு முட்டை, இறைச்சி சாப்பிட்டால் மனிதக்கறி உண்ணிகளாக மாறலாம் என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி குழந்தைகளின் உணவில் ஒரு பகுதியாக முட்டைகளை வழங்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாஜக அமைச்சர் கோபால் பார்கவா “இந்த செயல் மக்களின் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக” ஆத்திரமடைந்தார். குழந்தைகள் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள் . “இந்த அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? குழந்தைகளுக்கு முட்டை கொடுங்கள்… சாப்பிடாதவர்களை கட்டாயப்படுத்துங்கள். அவர்கள் அதை சாப்பிடாவிட்டால், கோழி, மட்டன் ஆகியவற்றை உண்பார்கள். இந்திய கலாச்சாரத்தில் இறைச்சி சாப்பிடுவது அனுமதிக்கப்படவில்லை. இதை சிறுவயதிலிருந்தே சாப்பிட்டால் வளரும்போது மனித கறி உண்ணிகளாக மாறலாம் என்று கோபால் பார்கவா கூறினார்.
பாஜக எதிர்த்தாலும்் எனக்கு கவலையில் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவி கூறியுள்ளார் “பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருக்கும் தொகுதிகளில் நாங்கள் சேவையை வழங்குவோம். முட்டையில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. முட்டையினால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நான் கூட முட்டை சாப்பிடுகிறேன்” என்று அவர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் தெரிவித்துள்ளார்.