புதுதில்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கி பதான்கோட் அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குற்றம்சாட்டப்பட்ட கயவர்களில் பிரதானமான மூவருக்குநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. தண்டிக்கப்பட்ட வர்களில் சஞ்சி ராம் என்பவன் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கோவிலின் பூசாரியாவான். இவனுக்கு, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் ஆதர வுடன் இயங்கும் இந்து ஏக்தா முன்னணி என்னும் அமைப்பு வக்காலத்து வாங்கி வந்தது.தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ள மற்ற மூவர் காவல்துறைஅதிகாரிகள். இவர்கள் இவ்வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்காக கயவர்களிட மிருந்து நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற பேர்வழிகள். ஆனால் நீதிமன்றம் இவர் களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று மிக மென்மையான அளவில் தண்டனை விதித்திருக் கிறது. பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த சஞ்சி ராமின் மகன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேல்முறையீடு செய்க
குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மூவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேசமயத்தில், தண்டனைக்குள்ளாகியுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் 201ஆவது பிரிவின்கீழ் உச்சபட்ச தண்டனையும் மேலும் அதிகமான அளவில் அபராத மும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் கருதுகிறது. அப்போதுதான் கிரிமினல் களுக்கு உதவிடும் காவல்துறை அதிகாரிகளுக்கு இனிவருங் காலங்களில் இதுபோன்று கிரி மினல்களுக்கு உதவிடக்கூடாது என்கிற அச்ச உணர்வு ஏற்படும்.
எனவே, இவ்வாறு குறைந்த தண்டனை வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் தண்டனைக்கு எதிராகவும், விடுதலை செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிராகவும் உயர்நீதி மன்றத்தில் அரசுத்தரப்பு மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இந்த வழக்கில் பாதிப்புக்கு ஆளானவர்களுக்காக வழக்கை நடத்திய வழக்குரைஞர் தீபிகா சிங் ராஜாவாட்டிற்கு கிரிமினல்கள் கடும் அச்சு றுத்தல்களை அளித்தார்கள். ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாது, பாதிப்புக்கு உள்ளா னவர்கள் பக்கம் நின்று அவர்கள்நீதிமன்றத்தில் சாட்சிய மளிப்பதற்கு உற்ற பாதுகாப்பு அளித்திட்டார். அவருடைய கடும்முயற்சிகளின் விளைவாகத் தான் வழக்கு, அம்மாநிலத்தி லிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, சிறப்புப் புல னாய்வுக் குழு அமைக்கப்பட்டு, பாரபட்சமற்ற புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இவ்வழக்கில் கிரிமினல்களுக்கு ஆதரவாக வந்த அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடி பணியாது, பாதிப்புக்கு உள்ளான
வர்களுக்கு நீதி கிடைப்பதற்காக சட்டத்தின் ஆட்சியை அமல் படுத்திட உறுதியாக நின்ற வழக்குரைஞர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.(ந.நி.)