tamilnadu

img

ஆந்திராவை மிரட்டும் கொரோனா... ஒரே நாளில் 21 பேருக்குப் பாதிப்பு 

விசாகப்பட்டினம் 
தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. வெள்ளியன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. கர்னூல் மாவட்டத்தில் எமதர்மன் வேடமிட்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்று ஆந்திர மாநில காவல்துறை எச்சரித்துள்ளது. 

;