புவனேஸ்வர்
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான ஒடிசாவில் கொரோனா அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 924 பேர் பலியாகியுள்ள நிலையில், 2.02 லட்சம் குணமடைந்துள்ளனர். இன்னும் 30,301 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு சராசரியாக 2 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.
மற்ற மாநிலங்களில் போல் அல்லாமல் ஒடிசாவில் வித்தியாசமாக வங்கி ஊழியர்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அங்கு ஏ.சி. போட்டு வேலை செய்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இதுவரை 3,066 வாங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் பலியாக்கியுள்னனர். அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியில் 968 பேருக்கும், ஆக்சிஸ் வங்கியில் 390 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.