புதுதில்லி:
நாட்டிலேயே மிகவும் குறைந்த கோவிட் மரண விகிதம் (0.34) கொண்ட மாநிலம் கேரளம் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களான மிசோரம்,அருணாச்சலப் பிரதேசம், மத்திய ஆளுகைக்கு உட்பட்ட நாகர்ஹவேலி ஆகிய பகுதிகளில் கேரளத்தைவிட குறைவான மரண விகிதம் உள்ளது. கேரளம் உட்பட14 மாநிலங்களில் மரண விகிதம் ஒருசதவிகிதத்துக்கும் குறைவாகும். நாட்டின்ஒட்டுமொத்த மரண விகிதம் 1.5 சதவிகிதம். ஞாயிறன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 480 மரணங்கள் பதிவாகி உள்ளது. மொத்த மரணங்கள் 1.19 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஞாயிறன்று மகாராஷ்ட்டிராவில் 23 சதவிகிதம் 112 பேர், மேற்கு வங்கம் 60 பேர், தில்லி 33, கர்நாடகா 32, தமிழ்நாடு 31, உ.பி 28, சத்தீஷ்கர் 25, ஆந்திரா 21, ஒடிசா 16 பேர் உயிரிழந்தனர். 24 மணி நேரத்தில்மேலும் 45,148 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. 59,105 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர்.