புதுதில்லி:
பாபர் மசூதி இடிப்பு குறித்த தீர்ப்புநீதியின் கேலிக்கூத்து என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மத்திய செயற்குழு சார்பில் அகில இந்தியதலைவர் முகமது ரியாஸ், பொதுச்செய லாளர் அவாய் முகர்ஜி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது, ஆனால் நீதி மறுக்கப்பட்டது. முற்றிலும் முன்கூட்டித் திட்டமிடப்பட்ட பாபர் மசூதி இடிப்புக் குற்றம்நீதித்துறையின் உதவியுடன் அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1992-93ல் மும்பை கலவரங்களும் நடந்தன. இதற்காக நடத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த வெறியாட்டங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
குற்றச்செயல் நடந்த இடத்தில் இருந்துகொண்டு அதற்கு வழிகாட்டிய பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அனைவரும் மசூதியை அழிக்க சதி செய்த குற்றச்ச்சாட்டில் தற்போது குற்றமற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 2019 நவம்பர் 8 அன்று தனது அயோத்தி தீர்ப்பில்,பாபர் மசூதி இடிப்பை ‘சட்டத்தின் விதி மீறல்’ என்று கூறியது. இப்போது, லக்னோ நீதிமன்றம்இந்த குற்றத்தின் முக்கிய குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்ல என்று ‘கண்ட றிந்துள்ளது’.
நீதிபதி எம்.எஸ். லிபர்ஹான் தற்போதைய தீர்ப்பை ‘முற்றிலும் கேலிக்கூத்து’ என்று வர்ணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1992 ஆம் ஆண்டில் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட லிபர்ஹான் விசாரணை ஆணையம், அதன் விசாரணையின் போது அது சேகரித்த சான்றுகள்பற்றிய விரிவான விவரத்தை அளித்திருந் தது, மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘ஆணையத்தின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணானது’.இந்த தீர்ப்பு அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பத்தை மேலும் சிதைக்கும். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் இத்தகைய படுகொலைக்கு எதிராக இளைஞர்கள் வீதிகளில் அணிதிரளுமாறு வாலிபர் சங்கத்தின் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.