tamilnadu

img

பனாரஸ் பல்கலை.யிலிருந்து பெண் அதிகாரியை நீக்கி அராஜகம்

மிர்சாபூர்:
விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதற்கான, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மூத்த பெண் அதிகாரி கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் மத உணர்வுகளை அவமதித்துவிட்டதாக அந்த அதிகாரி மீது காவல்துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மிர்சாபூரில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு அயோத்தி தீர்ப்பையொட்டி, ஒரு தரப்பினர் ஆர்எஸ்எஸ் கொடியை மைதானத்தில் பறக்க விட்டுள்ளனர். 
இதனை அந்த பல்கலைக் கழகத்தின் தலைமை துணை நிர்வாகியாக இருந்து வரும் கிரண் தாம்லே கண்டித்துள்ளார். கல்வி நிறுவனத்தில் ஆர்எஸ்எஸ் கொடியை பறக்க விடுவது,  தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.எனவே, ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றுமாறு, சாக்சா மாணவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், கொடியை அப்புறப் படுத்த அவர்கள் யாரும் முன்வராத நிலையில், தானே கொடியை அகற்றியுள்ளார்.இதற்காகவே, தாம்லே மத உணர்வுகளை அவமதித்து விட்டார் என்று கூறி அவரை கட்டாய ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். மேலும், மிர்சாபூரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ்-காரர்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரி கிரண் தாம்லே மீது, உத்தரப்பிரதேச போலீசார், வழக்கும் பதிவு செய்துள்ளனர்.பல்கலைக்கழக விதிமுறையைக் கடைப்பிடித்ததற்காகவா எனக்குத் தண்டனை? என்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார்.