புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள எல்லைபிள்ளை சாவடி பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவர் வாகனங்களை வாடைக்கு விடும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பச்சியப்பன் பழுது நீக்கம் செய்வதற்காக தனது வேனை மேட்டுப்பாளைத்தில் உள்ள பணிமனையில் வேலை பார்த்துவிட்டு இன்று மீண்டும் எல்லைபிள்ளைச்சாவடிக்கு எடுத்துச்சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக முன்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி சென்று அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து புதுச்சேரி தீயணைப்பு துறையினர் விரைந்தது வந்து தீயை அணைத்தனர்.