tamilnadu

img

குடிநீர் திருட்டைக் கண்டித்து காலிக்குடத்துடன் முதியவர் தர்ணா

புதுக்கோட்டை, ஏப்.23- புதுக்கோட்டை நகராட்சி பகுதியில்சிலர் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 42-ஆவது வார்டுக்கு உட்பட்டதிருவப்பூர் சோழா ரியல் ஏஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவர் காலிக்குடத்துடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்குபரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சிங்காரவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை அவர் விலக்கிக்கொண்டார்.

;