tamilnadu

img

பீகாரில் காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 12 பேர் பலி

பீகாரில் காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் அருகே கன்ட்டி தேசிய நெடுஞ்சாலையில், 14 பேருடன் ஸ்கார்பியோ கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, தவறான சாலையில், செங்கற்களை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று எதிரே வந்த போது, காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.