பனாமா நாட்டில் இடதுசாரிகள் கட்சி சார்பாக போட்டியிட்ட நிடோ கோர்டிசோ குடியரசுத்தலைவர் தேர்தலை வென்றுள்ளார்.
தென்னமெரிக்க கண்டத்தில் வடாமெரிக்காவிற்கும், தென்னமெரிக்காவிற்கும் நடுவில் அமைந்துள்ள நாடு பனாமா. பனாமா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 27 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டில் நடந்த தேர்தலில் சுமார் 72 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக அந்நாட்டு தேர்தல் ஆணைய அமைப்பு கூறியிருந்தது.
இந்த தேர்தலில் இடதுசாரிகள் கட்சி தரப்பில் புரட்சிகர ஜனநாயக கட்சியும், வலதுசாரிகள் கட்சி சார்பாக ஜனநாயக மாற்ற கட்சியும் பெரும் போட்டிக்கு உள்ளாகின. பின்பு வெளியான தேர்தல் முடிவில் இடதுசாரிகளின் புரட்சிகர ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட நிடோ கோர்டிசோ(Nito Cortizo) 33.07 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வலதுசாரிக் கட்சியான ஜனநாயக மாற்றம்(democratic change) சார்பில் போட்டியிட்ட ரொமுலோ ரௌக்ஸ்(Romulo Roux) 31.07 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
மூன்றாம் நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரிகார்டோ லோம்பானா 19.35 சதவிகித வாக்குகளை பெற்றார். தேர்தலில் போட்டியிட்ட மற்ற நான்கு வேட்பாளர்கள் மீதமிருந்த 16 சதவிகித வாக்குகளை பெற்றனர். அமையும் இடதுசாரிகள் ஆட்சி அந்நாட்டில் பெருகி வரும் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ளது..
மூன்றாம் நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரிகார்டோ லோம்பானா 19.35 சதவிகித வாக்குகளை பெற்றார். மீதமிருந்த 16 சதவிகித வாக்குகளை தேர்தலில் போட்டியிட்ட மற்ற வ்நான்கு வேட்பாளர்கள் பெற்றனர்.