tamilnadu

img

அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 24- அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு சார்பில் ரூ.7500-ம், தமிழக அரசின் சார்பில் ரூ.5000-ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலக்கோட்டை வாசலில் ஆர்.ராமமூர்த்தி தலை மையில், நாகை-புத்தூர் அண்ணா சிலை அருகில் சு.மணி தலைமையில், சிக்கல் கடைத்தெருவில் ராஜேந்திரன் தலைமையில், மேலப்பிடாகைக் கடைத் தெருவில் ஏ.தமிழரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாட்டியக்குடியில் டி.ஜெயராமன், ஒக்கூரில் ஜே.முருகவேல், பெரம்பூரில் ஸ்டாலின், திருமருகலில் பி.லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர். சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி போராட்டங்களை ஒருங்கி ணைத்தார்.

;